கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சி பேணிட அது கொஞ்சம் கைகொடுக்கும் என்பதாக 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள், முப்பரிமாண காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கில் முடங்கியிருக்கும், குழந்தைகள் மகிழ்ச்சி பேணிட அது கொஞ்சம் கைகொடுக்கும். கொரோனா தாக்கம் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர பல உலக நாடுகளில் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துப் பார்த்துக்கொள்வ தென்பது பெற்றோர்களுக்கு இப்போது பெரிய அறைகூவலாக மாறிவிட்டது. இவர்களைக் கருத்தில் கொண்டு கூகிள் நிறுவனம் புதிய அம்சத்தைக் குழந்தைகளுக்காக வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் குழந்தைகளை மகிழ்விக்க புதிய தொழில்நுட்ப அம்சத்தைக் கூகுள் தனது கூகிள் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கூகிள் முப்பரிமாணப் படிமம் என்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே கூகிள் அழைத்து வந்துள்ளது. காட்டு விலங்குகளை நமது வீட்டிற்கே வரவழைக்கும் விளையாட்டின் மூலம் குழந்தைகளை சிறுது நேரம் மகிழ்விக்க முடியும். அதேசமயம், பெற்றோர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்க முடியும் என்று கூகிள் தெரிவித்துள்ளது. உங்கள் மிடுக்குப்பேசியில், முதலில் கூகிள் தேடலில் ஏதேனும் ஒரு விலங்கின் பெயரை தட்டச்சு செய்யுங்கள். உதாரணமாக, புலி எனத் தட்டச்சு செய்து தேடுங்கள். முதல் பக்கத்தில் விக்கிப்பீடியா விளக்கத்துக்குக்கீழ் புலியின் முப்பரிமாண உருவம் இடம் பெற்றிருக்கும். அதன் அருகில் கொடுக்கப்பட்டிருக்கும் View in 3Dதேர்வைத் தொடுங்கள். புலி முப்பரிமாண விலங்காக வந்து விடும். இது முப்பரிமாண விலங்கு என்பதினால் உங்கள் விரல் அசைவுகளுக்கு ஏற்றவாறு அனைத்து வகையாகவும் இந்த படத்தை நீங்கள் திருப்பிப் பார்க்க முடியும். நீங்கள் இருக்கும் அறையிலேயே கட்டு விலங்கை வரவழைக்க View in your space தேர்வைத் தொடுங்கள். உங்கள் செல்பேசியின் படக்கருவி திறக்கப்படும். நீங்கள் இருக்கும் அறையிலேயே இந்த விலங்கின் தோற்றம் தெரியும். இந்த விலங்குளை உங்கள் வீட்டில் குழந்தைகளுக்குக் காட்டி மகிழ்வதோடு அவற்றோடு நீங்கள் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து படமும் எடுத்துக் கொள்ளலாம். இப்படி புலி, கரடி, ஆடு, ஓநாய், பென்குயின் எனப் பல விலங்குகளை உங்கள் குழந்தைகளுக்காக வீட்டுக்கே அழைத்து வர முடியும். அடுத்து பட்டியலில் என்னனென்ன விலங்குகள் இருக்கின்றன என்று சோதனை செய்யலாம் வாங்க.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



