Show all

அரிசி குடும்ப அட்டையினருக்கு பொங்கல் பரிசு ரூ.ஆயிரம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ரூபாய் ஆயிரம் உள்ளிட்ட, அரிசி குடும்ப அட்டையினர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை வெளியீடு

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 தருவதற்கு 2363 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழர்திருவிழா, பொங்கல்விழாவினை முன்னிட்டு அரிசிகுடும்ப அட்டையினர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி மற்றும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசு, அரசாணையை இன்று பிறப்பித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.