எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி கட்டணங்கள் உயரவுள்ளன. ஆனாலும் பழைய கட்டணத்திட்டத்தில் கொஞ்ச நாளைக்கு தொடர வாய்ப்பளித்திருக்கிறது ஏர்டெல். 11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்கி ஏர்டெல் செல்பேசி கட்டணங்கள் உயரவுள்ளன. ஆனாலும் பழைய கட்டணத்திட்டத்தில் கொஞ்ச நாளைக்கு தொடர வாய்ப்பளித்திருக்கிறது ஏர்டெல். ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தனது செல்பேசி கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால், ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் கட்டணஏற்றம் செய்வோர் புதிய கட்டணப்படி அதிகமாக பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், பழைய திட்டத்தின் படியே தொடர ஒரு வழி தெரிவித்திருக்கிறது ஏர்டெல். நடப்பு கட்டணத்திட்டத்திற்கு காலவதி ஆகவில்லை என்றாலும், சனிக்கிழமைக்குள் உங்களுக்கு வசதியான கட்டணவகைகளில் முன்கூட்டியே கட்டணஏற்றம் செய்துகொள்ளுங்கள். பழைய கட்டணவகை முடிந்த பிறகு, ஏற்கெனவே கட்டணஏற்றம் செய்த கட்டணவகைப்படி, அதாவது பழைய கட்டணத்தில் பேசிக்கொள்ளலாம். நடப்பு கட்டணவகை காலவதி ஆகவில்லை என்றாலும், சனிக்கிழமைக்குள் உங்களுக்கு வசதியான கட்டணவகைக்கு முன்கூட்டியே கட்டணஏற்றம் செய்துகொள்ளுங்கள். ஆனாலும் இந்த வாய்ப்பும் வரம்பில்லா பேச்சுகளுக்கான கட்டணவகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 199, 399, 509 கட்டணவகையைப் பயன்படுத்தி வருபவர்கள் இந்த வாய்ப்பை கொஞ்ச நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். போங்கய்யா நீங்களும் ஒங்க சலுகையும் என்று கோபத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பம் போல செயல்படலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,349.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.