Show all

தமிழக மக்கள் அழுத்தம்! பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக- ஓர் இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பில்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதைப் பட்டியலிடும் வகைக்கான கருத்துக் கணிப்பில் தமிழக மக்கள் பாஜக தமிழகத்திற்கு தேவையில்லை என்பதாக அழுத்தம் கொடுத்துள்ளனர்.

20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி மற்;றும், பார்ப்பனியத் தொன்ம மூடநம்பிக்கைகளுக்கு, தெற்கை அடிமைப்படுத்தும் முன்னெடுப்புக்கு தங்கள் வசம் கிடைத்த இந்திய விடுதலையை தவறாகப் பயன்படுத்தி வந்தனர் காங்கிரசின் வடபுலத் தலைவர்கள். 

ஹிந்தித் திணிப்பு, பார்ப்பனியத் தொன்ம மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று தமிழக இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்ய உருவாக்கப்பட்ட அமைப்புகள்தாம் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும். 

காங்கிரசுக்கு எதிர்நிலைப்பாட்டில் தொடங்கப்பட்ட திமுகவும், திமுகவின் நிருவாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி தொடங்கப்பட்ட அதிமுகவும், தங்கள் அடிப்படை அடையாளத்தை மறந்து- மாறி மாறி காங்கிரசுக்கும் வடபுல ஆதிக்க அதிகாரத்திற்கும் பச்சைக் கம்பளம் விரித்தன. 

ஆனாலும் அந்த அடிமைத்தனத்தில், காங்கிரஸ் பெரிதாக, தமிழகத்தில் அப்படியொன்றும் காலுன்ற முடியவில்லை என்பது, தமிழக மக்களின் கொள்கைப்பாட்டை புலப்படுத்தும் செய்தியாகும். 

இருந்தாலும்கூட. தமிழகத்தற்கு வெளியேகூட தமிழர்களுக்கு தன்னாட்சி கிடைத்துவிடக் கூடாது என்கிற தங்கள் நிலைப்பாட்டிற்கு, தமிழீழ விடுதலையைப் பொசுக்குவதற்கு சிங்களவர்களுக்கு பெருந்துணையாற்றி வரலாறு படைத்தது காங்கிரஸ்.

தமிழகத்தில் அதிகாரம் செல்லுபடியாகாத நிலையில், தமிழீழ விடுதலையைப் பொசுக்கியதில் பெரிதாக நிறைவு எய்தாத வடவாதிக்கக் குழுவினர் கொத்தாக, இதுதான் அதற்கு சரியான கட்சி என்று, பாஜகவைத் தூக்கிப்பிடித்து வருகின்றனர். 

ஒன்றியத்தில் இன்றைக்கு ஆண்டுவரும் பாஜக, வடக்கே காஷ்மீரின் சிறப்பு தகுதிச் சட்டத்தை நீக்கியும், இந்தியா முழுவதும் சிறு குறு தொழில் வீழ்ச்சிக்காக பணமதிப்பழப்பை செய்தும், தமிழகத்தில்- ஆளும் அதிமுகவின் தலைமைக்கு தொடர் நிருவாக நெருக்கடிகளைக் கொடுத்துவர, அதைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருவர் நிரந்தரமாகவும், மற்றவர் தற்காலிகமாகவும் அகன்றுள்ள நிலையில், தற்போதைய அதிமுக நிருவாகத்தின் தலைமுடியை இறுக்கிப் பிடித்து ஆட்டிப்படைத்து கொண்டுள்ளது ஒன்றிய ஆட்சி அதிகாரத்தின் துணையோடு பாஜக. 

ஒரேநாடு ஒரேகட்சி-பாஜக, மதம்-ஹிந்துத்துவா, மொழி-ஹிந்தி, வரி-சரக்குசேவைவரி, மருத்துவம்-நீட், முதலாளி-அதானி அல்லது அம்பனி அடையாளஅட்டை-ஆதார் என்று, சமூக நீதிக்கான அதிகாரங்கள் அனைத்தையும் ஒரேநாட்டுத் தலைப்பில் ஒன்றிய பாஜக அரசு, சிலவற்றைப் பறித்தும் சிலவற்றைப் பறிக்கவும் முயன்று வருகிற நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துள்ளது. 

இந்தத் தேர்தலில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்திற்கானதான சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க திமுகவிற்கு ஆதரவளியுங்கள் என்று அதன் கூட்டணிக் கட்சிகள் களத்தில் நிற்கின்றனர்.

ஒரேநாடு ஒரேகட்சி-பாஜக, மதம்-ஹிந்துத்துவா, மொழி-ஹிந்தி, வரி-சரக்குசேவைவரி, மருத்துவம்-நீட், முதலாளி-அதானி அல்லது அம்பனி அடையாளஅட்டை-ஆதார் என்று தமிழகத்தின்; அதிகாரங்கள் அனைத்தையும் ஒரேநாட்டுத் தலைப்பில் ஒன்றிய பாஜக அரசுக்கு தாரை வார்த்துவிட்டு, வெறுமனே ஆட்சி நிருவாகத்திற்காக மட்டுமாக நடக்கவிருப்பதுதான் சட்டமன்றத் தேர்தல் என்பதை அங்கீகரிக்கும் தற்போதைய நிருவாகத்தில் இருந்துவரும் அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள் என்று அதன் கூட்டணிக் கட்சிகளும் களத்தில் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் மீதான, அதிகார ஆதிக்கப்பாட்டை நேற்று முன்னெடுத்த காங்கிரசும், இன்றைக்கு அந்தப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிற பாஜகவிற்கும் தமிழக மக்கள் ஆதரவளிப்பார்களா? என்ற கேள்வியை முன்வைத்து, ஒரு இயங்கலை இதழ் ஒரு கருத்துக் கணிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒவ்வொன்றும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதைப் பட்டியலிடும் வகைக்கான கருத்துக் கணிப்புக்குக் கீழ்கண்ட கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொன்றும் பத்து பத்து தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற முன்மொழிவுக்கு 2.25 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளார்கள்.
ஒவ்வொன்றும் ஐந்து ஐந்து தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற முன்மொழிவுக்கு 6.57 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளார்கள்.
காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெல்லலாம் என்;பதற்கு 9.29 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளார்கள்.
பாஜகவுக்கு 20 தொகுதிகளும் கிடைக்கும் என்பதற்கு 2.72விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம் 8.2 விழுக்காட்டினர் தெரிவித்திருக்கின்றனர்.
அடுத்ததாக காங்கிரசுக்கு கிடைக்கப் போவது சுழியம்தான் 3.85 தெரிவிக்க 
பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்று 67.13 விழுக்காட்டினர் தெரிவித்து பாஜக தமிழகத்திற்கு தேவையே இல்லை என்கிற கருத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றனர் அந்த இயங்கலை இதழுக்கு வாக்களித்த தமிழக மக்கள். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.