Show all

திமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்! விகடன் இதழியல் குழுமம் கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்படுகிறது.

சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. தற்போது விகடன் இதழியல் குழுமமும் திமுகவிற்கான அந்த வெற்றிச் செய்தியை உறுதிப்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பட்டியல் இட்டிருக்கிறது.

18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடப்பு சட்டமன்றத் தேர்தல் களத்தில், மக்களின் நாடித்துடிப்பை அறிவதற்காகக் களமிறங்கிய ஜூனியர் விகடன், 468 தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், 117 நிருபர்கள் எனப் பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியதாகத் தெரிவிக்கிறது.

வேளாண்பெருமக்கள், கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், இல்லத்தரசிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள், திருநங்கைகள் எனப் பல்வேறு மட்டத்திலும் சுமார் 50,000 வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தமுறை காசு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. தமிழக மக்கள் ஒரு முடிவெடுத்துட்டுத்தான் இந்தக் கருத்துப்பரப்புதல்  கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற ஒரு முதன்மைத் தகவலை கருத்துக் கணிப்பில் அவர்கள் பெற்றதாகத் தெரிவிக்கிறார்கள். பணத்தையும் தாண்டி, வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், தனிநபர்களின் வருவாயைப் பெருக்குவதற்கான வழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் கட்சிகளை எடைபோடுவதைக் களத்தில் பார்க்க முடிந்ததாம்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் முழுவதும் கணிசமான அளவுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு இருப்பதைப் பார்க்க முடிந்ததாகவும் அதேபோல, நகர்ப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தன்னுடைய ஆதரவு வட்டத்தைப் பெருக்கியிருக்கிறது எனவும் முதன்மைத் தகவல் கருத்துக் கணிப்பில் கிடைத்திருப்பதை தெரிவிக்கிறார்கள்.

அதே போல தென்மாவட்டங்களிலும் கழிமுகப் பகுதியிலும் அமமுகவின் தாக்கம் அதிகமிருப்பது நமது கருத்துக்கணிப்பு முடிவுகளில் எதிரொலிக்கிறது. அந்தப் பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் அதிமுக வெற்றிவாய்ப்பைப் பறிகொடுப்பதற்கு அமமுக முதன்மைக் காரணம். என்ற தகவலையும் கருத்துக் கணிப்பில் பெற்றிருக்கிறார்கள் 

கருத்துக் கணிப்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களிலேயே பாஜக கூட்டணியால் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பது தலைமைப்பாடான தகவல் என்று தெரியவருகிறது. ஆனாலும் அதிமுக வேட்பாளர்கள் சிலர் தப்பி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு என்பன- சொந்தச் செல்வாக்கு, இரட்டை இலைக்கு என இருக்கும் வாக்கு வங்கி, பாமக பலம் உள்ளிட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் கருத்துக் கணிப்பில் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுவது, தமிழக மக்களுக்குத் ‘தேன் வந்து பாயுது காதினிலே’ என்கிற இனிக்கும் செய்தியாகும்.

திமுகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கான 125 தொகுதிகளில் வெற்றி கிடைக்க, திமுக கூட்டணிக்கு கருத்துக் கணிப்பில் 234க்கு 163 தொகுதி என்பதாக மதிப்பெண் கிடைத்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் பாஜக சுழியம் தொகுதிகளும், அதிமுக 48 தொகுதிகளிலும் வெற்றி கண்டிடக்கூடும் என்றும், அதிமுக  கூட்டணிக்கு கருத்துக் கணிப்பில் 234க்கு 52 தொகுதி என்பதாக மதிப்பெண் கிடைத்துள்ளது. 

மீதம் உள்ள பத்தொன்பது தொகுதிகளில் ஒரு தொகுதியில் கமல்காசன் வெல்வார் என்றும், மீதி இழுபறி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சிக்கும், அமமுகவிற்கும் எந்தத் தொகுதியும் உறுதியாக பதிவிடப்படவில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.