வைகோவிற்கு பாதகமாக இன்று வழங்கப் பட்டது ஒரு தீர்ப்பு! ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே “தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்படுவதான இன்றைய தீர்ப்பு சரியானது அல்ல என்பதாகவே மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும்” எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது; உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இந்த வழக்கு உறுதியாக தள்ளுபடியாகும் என்றே பெரும்பாலன சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத் தமிழர்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் பற்றி வைகோ அப்போதைய தலைமைஅமைச்சர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்த மனுக்களின் தொகுப்பை ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ புத்தகமாக வெளியிட்டார். இந்த வெளியீட்டு விழாவில், வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகளைப் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டு தேச துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. அதன் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது காலை 10.40க்கு அறங்கூற்றுவர் முன் நூற்றுக்குமேட்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்டச் செயலாளர்கள் புடைசூழ, நேர்கொண்ட பார்வையுடன், வைகோ நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தார். குண்டூசி விழுந்தால், விழுந்த ஒலி கேட்குமளவிற்கு அறங்கூற்றுமன்றமே அமைதியானது. ‘உங்கள் மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார் அறங்கூற்றுவர் சாந்தி. இதைக் கேட்டு வழக்கறிஞர்கள் நடுவே சலசலப்பு ஏற்பட்டது. ‘என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ இப்போதே கொடுத்துவிங்கள்’ என்றார் வைகோ ‘ஓராண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்று தண்டனையை மட்டும் வாசித்துவிட்டு தீர்ப்பின் பிரதியை வைகோவின் வழக்கறிஞர்களிடம் கொடுத்தார். உடனடியாக தண்டனைப் பணம் கட்டப்பட்டு தீர்ப்பினையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து பிணையும் கொடுக்கபட்டு 30 நாள் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பை முழுமையாக வசித்த வைகோ ‘தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கி கருணை காட்டுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் தரப்பில் கேட்டுக் கொண்டபடி...’ என்ற பொருள் படும் வாசகத்தை தீர்ப்பில் பார்த்துவிட்டார் உடனே கையில் தீர்ப்பு பிரதியை வைத்துக் கொண்டு அறங்கூற்றுவரிடம் ‘அம்மா! நாங்கள் எந்த இடத்திலும் எனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்கும்படி உங்களிடம் ஒரு நாளும் கோரிக்கை வைக்கவில்லையே... வாதாடவில்லையே.. ஆனால் தீர்ப்பில் நான் குறைந்த பட்ச தண்டனை கேட்டதாக குறிப்பிட்டுள்ளீர்களே...? இது நீதிபதியின் எண்ணத்தில் இருக்கும் விஷத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது’ என்று சொன்னதும் அறங்கூற்றுவர் சாந்தி அதிர்ச்சியாகிவிட்டார். ஏனெனில் அறங்கூற்றுமன்றத்தில் இதுவரை யாரும் இப்படி அவரைக் கேள்வி கேட்ட வரலாறு இல்லை. உடனடியாக சில ஆவணங்களை எடுத்துப் பார்த்தவர், ‘ஆமாம்... நீங்கள் குறைந்த பட்ச தண்டனை தர சொல்லி கேட்கவில்லை. நான் உடனடியாக தீர்ப்பைத் திருத்திவிடுகிறேன்’ என்று சொல்லி அந்த சர்ச்சைக்குரிய வாசகங்களை தன் கைப்பட அழித்து அதில் தன் கையெழுத்தையும் இட்டு அறங்கூறறுமன்றப் பணியாளர்களிடம் கொடுத்து தனது தவறையும் ஒப்புக்கொண்டார். தீர்ப்பை அறிந்ததும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான பேர்கள் சிறப்பு அறங்கூற்றுமன்றத்தின் முன் கூடினார்கள். கட்சி தலைமையகம் சென்ற வைகோ இப்போது ஆலோசனை நடத்திவருகிறார், இதன்போது பல்வேறு மாற்று கட்சி இயக்க தலைவர்கள் வைகோவை சந்தித்து வருகின்றனர். அதேவேளை இரு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும் என்றும், ஆனால் மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் மாநிலங்களவைக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது அனால் வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் என்று அறியமுடிகிறது. மேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது; உச்ச அறங்கூற்றுமன்றத்தில் இந்த வழக்கு உறுதியாக தள்ளுபடியாகும் என்றே பெரும்பாலன சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,204.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.