கொரோனா அன்றாட பாதிப்பில் தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்திருக்கிற நிலையில், தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிராக கூடுதல் பொறுப்பு எடுக்க வேண்டும் என்ற எச்சரிக்கை அறிவுறுத்தப் படுகிறது. 06,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களை கடுமையாக பாதித்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளானார்கள். இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 33 ஆயிரத்து 59 பேர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். எனவே அன்றாடத் தொற்று பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை கேரளா வகிக்கிறது. அங்கு 31 ஆயிரத்து 337 பேர்கள் புதிதாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் முடிந்த ஒரு நாளில் தமிழ்நாட்டில் புதிதாக 34 ஆயிரத்து 875 பேர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், 365 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் 32 ஆயிரத்து 762 பேர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடகாவில் 34,281- பேர்களும், மராட்டியத்தில் 34,031- பேர்களும் நேற்று தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.