நாம் வாக்களித்தவர் வென்றாக வேண்டுமே என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது தமிழக மக்களிடம். நாளை வாக்குகள் எண்ணிக்கை என்ற நிலையில் கடைசி நாளான இன்று. நாம் வாக்களித்தவரைத்தானே வாக்கு எந்திரங்களும் பதிவு செய்திருக்கும் என்ற ஐயமும் பலரின் ஒரே கேள்வியாக உள்ளது 18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நாம் வாக்களித்தவர் வென்றாக வேண்டுமே என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது தமிழக மக்களிடம். நாளை வாக்குகள் எண்ணிக்கை என்ற நிலையில் கடைசி நாளான இன்று. நாம் வாக்களித்தவரைத்தானே வாக்கு எந்திரங்களும் பதிவு செய்திருக்கும் என்ற ஐயமும் பலரின் ஒரே கேள்வியாக எழுந்து உள்ளது. திடீரென்று, அதிமுகவே மீண்டும் வெல்லும் என்பதான, பாண்டேவின் அதிரடிக் கருத்துக் கணிப்பு இந்தக் கேள்விக்குக் காரணமாக அமைகிறது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்குகள் எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 14 மேசைகள், அதிகபட்சம் 28 மேசைகள் வாக்கு எண்ணிக்கைக்காக வைக்கப்பட்டுள்ளன. தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மேசைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 75 மையங்களிலும் 3,372 மேசைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு 739 மேசைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரின் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு தனியாக 309 மேசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,420 மேசைகளில் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும். வாக்குகள் எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. என்றாலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் முகமூடி, பாதுகாப்பு உடை போன்றவை வழங்கப்படும். வாக்குகள் எண்ணும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட ஆட்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் அரசியல் கட்சி முகவர்களுக்கும் முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படும். குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். ஒவ்வொரு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அடுத்த 30 நிமிடங்களில் அதன் முடிவுகளை அந்தந்த மைய அதிகாரி அதிகாரப்பாடாக வெளியிடுவார். இந்த பணிகள் அனைத்தும் தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 28 மேசைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் முதல் 2 மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெளிவாக தெரிய வந்துவிடும். அந்த வகையில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முன்னணி நிலவரத்தை நாளை காலை 11 மணிக்கு அறிந்து கொள்ளலாம். நாளை பிற்பகலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும். 20 முதல் 44 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே முழு விவரங்கள் திங்கட்கிழமை அதிகாலை தான் தெரிய வரும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.