கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால், குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர். குழந்தைகளை சிலர் ஆர்வமிகுதியில் காரில் ஓட்டுனர் இருக்கையின் முன்பகுதியில் அமர வைத்து ஓட்டுவார்கள். அப்படி ஓட்டுவது மிகப்பெரிய அபாயங்களுக்குக் காரணமாகிப்போவது உண்டு. அப்படித்தான இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. கைக்குழந்தையை மடியில் வைத்து காரை ஓட்டிய போது திடீரென குழந்தை தவறி விழப்போனதால், குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்த பசும்பொன், காரின் கட்டுப்பாட்டை நழுவ விட்டார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் பலியாகி உள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ஆறுமுகம்(65), மதுரை, தத்தனேரியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி அல்லிராணி(45), மதுரை முல்லை நகரை சேர்ந்த முத்தையா என்பவரது மகன் ராஜா(52) மற்றும் ஒரு கைகுழந்தை உள்பட 11 பேர் கார் மூலம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை, அல்லிராணி மகன் பசும்பொன்(21) ஓட்டி வந்துள்ளார். காளையார்கோவில் அடுத்த உலக ஊரணி என்ற இடத்திற்கு அருகே வந்தபோது திடீரென கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. . இதில் ஆறுமுகம், அல்லிராணி, இராஜா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த பசும்பொன் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தச் சோக நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். கைக்குழந்தையை மடியில் கிடத்தியவாறு பசும்பொன் காரை ஓட்ட முயன்றதாகவும் ஒரு கட்டத்தில் மடியில் இருந்து நழுவிய குழந்தையை பிடிக்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் இதனால் விபத்து நடந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணமோ, ஏன் இதுபோன்ற முயற்சி? என்று சோகத்தையும் தாண்டி சினமூட்டுவதாக உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.