Show all

முன்னுக்குப் பின் முரணான தகவல்! வேளச்சேரியில் பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து

பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து,  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றவாறு, தமிழகமே அதிரும் வகையான, தகவலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
 
27,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளச்சேரியில், பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள் குறித்து  இதுவரை அதற்கான நோக்கம் கண்டறியப்படாவில்லை அல்லது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தொடக்கத்தில் அந்த இயந்திரங்களில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் இன்று, வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என்று, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றவாறு, தமிழகமே அதிரும் வகையான, தகவலைத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்றத்  தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதல் மாலை வரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் குடியாட்சிக்கான கடமையை ஆற்றினர். சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு நாள் அன்று 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 4 பெட்டிகளை, இருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. முறைப்படி அரசு வாகனத்தில் அதிகாரிகள் அனுமதியுடன் எடுத்துச் செல்லவில்லை என கடும் புகார்கள் எழுப்பட்டது.

இந்தப்பாடு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று, வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் முன்னுப்பின் முரணான தகவல் ஆகும்.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் முதலில் அந்த வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பழுது காரணமாக வேறு இயந்திரம் மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அதனை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது விதிமீறல் எனவும், இந்த விதிமீறல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. முன்னதாக வாக்குகள் பதிவாகாத இயந்திரம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.