Show all

மின் அனுமதிக்கு இன்று முதல் புதிய நடைமுறைகள்!

கொரோனா கடும்பரவல் நிலையில் வெளி மாவட்டப் பயணத்திற்கு உரிய பதிவு இல்லாமல் அனுமதித்தால், கொரோனா பரவல் வழித்தடம் அறிவதில் சிக்கல் நேரும். எனவே மின்அனுமதி பதிவு கட்டாயம் என்றும், அனால் விண்ணப்பிக்கிற அனைவருக்கும் அனுமதி என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா கடும்பரவல் நிலையில் வெளி மாவட்டப் பயணத்திற்கு உரிய பதிவு இல்லாமல் அனுமதித்தால், கொரோனா பரவல் வழித்தடம் அறிவதில் சிக்கல் நேரும். எனவே மின்அனுமதி பதிவு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் கட்டாயத்தேவை பணிகளுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக- விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மின்அனுமதி வழங்கும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
.
கொரோனா பரவல் காரணம்பற்றி முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல மின்அனுமதி நடைமுறையில் உள்ளது. திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவத் தேவை போன்றவை தவிர மற்ற பயணங்களுக்காக விண்ணப்பித்தால் மின்அனுமதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

இதில் முறைகேடும் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில் மின்அனுமதி நடைமுறையை நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் மின்அனுமதி கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். 

மின் அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணுடன், செல்போசி எண்ணை பதிவிட்டால், உடனடியாக மின்அனுமதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு பழைய மின்அனுமதி நடைமுறையே தொடர்ந்து பேணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.