உலங்கு வானூர்தியில் திருப்பூர் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர் உடுமலை பகுதியில் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு உலங்கு வானூர்தியில் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். தமிழகத்தின் தேர்தல் திருவிழாவையொட்டி அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில் கருத்துப்பரப்புதல் மற்றும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் உலங்கு வானூர்தியில் வருகை புரிந்தார். தொடர்ந்து மடத்துக்குளம் பகுதியில் கமலஹாசன் கருத்துப்பரப்புதல் செய்ய வந்தார். அப்போது எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த கமலஹாசன் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துவிட்டு உடுமலை பகுதிக்கு திரும்பினார். அங்கும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் வருத்தமான கமல், கருத்துப்பரப்புதல் செய்யாமலேயே பறந்தார். கமலை பார்க்க காத்திருந்த மக்கள் நீதி மய்யத்தினர் மற்றும் அடுத்ததடுத்த பகுதிகளில் குறைவாக கலந்து கொண்டிருந்த சில பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.