Show all

மகிழ்ச்சி- கூட்டம் இல்லை! சென்னையில் இன்று டாஸ்மாக் திறப்பு

தமிழக மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி. சென்னையில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு எதிர்பார்த்ததை விட மிக மிக குறைவான கூட்டமே கூடியது. 

02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்ட நிலையில் குடிஆர்வலர்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை டாஸ்மாக்குகளில் பெரிய அளவில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பது பழைய சொலவடை. டாஸ்மாக்குக்கு விளம்பரம் தேவையில்லை என்பது புதிய சொலவடை. ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு பெருந்துன்பத்தின் ஊடேயும் டாஸ்;மாக் வணிகம் படுத்தது மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாகும்.

நாளை டாஸ்மாக் வணிகம் கூடிவிடுமா? கூடட்டும் அதனால் என்ன? இன்றைக்கு டாஸ்மாக் வணிகம் படுத்ததால், டாஸ்மாக் வணிகம் படுத்ததே மக்களுக்கு ஒரு நன்மையென்றால் மற்றொரு புறம் அங்கே கூட்டம் கூடாததால் கொரோனா பரவலுக்கான வாய்ப்பும் அங்கே குறைவது நல்ல செய்திதானே.

ஒரு காலத்தில் தமிழகத்தில் மொத்த டாஸ்மாக் வருவாயில் சென்னையில் மட்டும் டாஸ்மாக் வருவாய் 30விழுக்காடு என்று இருந்தது. ஆனால் அதற்கான எந்த சுவடும் இன்று தெரியவில்லை. மிக சொற்ப வருமானமே இன்று வரும் என்று கணித்துள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.