Show all

திரும்பிப் போ மோடி! வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில் தலைப்பாகியுள்ளது

“திரும்பிப் போ மோடி” முழக்கம் வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில் தலைப்பாகியுள்ளது.

02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தமிழகம் வருவதால்- “திரும்பிப் போ மோடி” வழக்கம் போல இந்த முறையும் கீச்சுவில் தலைப்பாகியுள்ளது.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை தமிழகம் வருகிறார். இதற்காக அவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார். கொரோனா காலகட்டத்துக்கு பிறகு மோடி தமிழகம் வருவது இதுதான் முதல் முறையாகும் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சிற்சில திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார் பிரதமர் மோடி.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும்போதெல்லாம், “திரும்பிப் போ மோடி” என்கிற முழக்கம் கீச்சுவில் தலைப்பாவது வழக்கம். அதேபோல் இந்த முறையும் நேற்று மதியத்தில் இருந்தே திரும்பிப் போ மோடி முழக்கம் கீச்சுவில் முன்னெடுக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.