சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதான செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சில நாட்களுக்கு முன்பு, சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது. துறைமுகத்திற்கு அருகிலிருந்த கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று செய்தி வெளியாகியது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனம் மருத்துவர் ராமதாஸ், சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போது இந்தச் செய்தி அறிந்த பலரும் உடனடியாக இது குறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். திரு. ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட கருத்தை மேற்கோள்கட்டி பேசியுள்ள நடிகர் சேரன்- அரசு இதை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர்கள் பலரும் இந்த தவறான செயல்பாடு குறித்து தங்களது கருத்துக்கைளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்துக் காவல் நிலையங்களில், அறங்கூற்று மன்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குவந்து துருப்பேறி வீணாகிக் கொண்டிருக்கும். தமிழகத்தின் வனத்துறை அலுவலகங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட விலையுயர்ந்த மரங்கள் மழையிலும், வெய்யலிலும் வீணாகிக் கொண்டிருக்கும். வழக்கு முடித்து வைக்கப்படாமல் தமிழகம் முழுவதும் ஏராளமான விலையுயர்ந்த கட்டிடங்கள் இடுபாடுகளாகிக் கிடக்கும். பறிமுதல் செய்த பொருள்களை இப்படிக் கிடப்பில் போட்டு வீணடிப்பது அதிகாரிகளின் கலாச்சாரம்! அம்மோனியம் நைட்ரேட் பாட்டில் அது வேண்டாமே என்கிற எச்சரிக்கையை லெபனான் நமக்கு தெரிவித்துள்ளது. அரசும் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.