Show all

தமிழக முதல்வரின் முதல் கையெழுத்து! கலைஞர் பிறந்தநாளில் கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் கையெழுத்து, கலைஞர் பிறந்தநாளில், அரிசி அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு அமையும் என்று தெரியவருகிறது.

23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் கையெழுத்து, கலைஞர் பிறந்தநாளில், அரிசி அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு அமையும் என்று தெரியவருகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.

இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முதன்மையான திட்டமாகும்.

ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான 20,வைகாசி (ஜூன்-3) முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.

பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முதன்மைக் கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது. இது தவிர பல்வேறு முதன்மை அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.