தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த அடிப்படையில் காலையில் கமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாலையில் தொண்டர்களை பாதுகாப்புக்கு அழைத்திருக்கிறார் ஸ்டாலின். 25,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், ஒன்றியத்தை ஆளும் பாஜக எந்தவிதமான முறைகேடுகளையும் முன்னெடுத்து விடக்கூடாதே என்கிற அச்சம் அனைத்து கட்சிகளுக்கும் ஏற்பட்டிருப்பதை காலையில் கமலும் மாலையில் ஸ்டாலினும் உறுதி படுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் இன்று காலை திடீரென மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்தக் கல்லூரிக்கு வந்த கமல்ஹாசன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் மையங்களை கவனமாக பாதுகாத்திட வேண்டும் என திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார அத்துமீறல்களையும், அடாவடிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு ஒரு சிறு இடைஞ்சலும் ஏற்படாமல் அமைதியான தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வழிவகுத்ததாக கூறியுள்ளார். வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களை இன்னும் 24 நாட்கள் வரை கவனமாகப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், அங்கு பணியிலிருப்போர் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுத்தியுள்ளார். வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் சுழற்சி முறையில் இரவு பகலாக, தொய்வின்றி பாதுகாத்திட வேண்டும் என்றும் திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 24 நாட்கள் இருக்கின்ற காரணத்தால், எந்தவிதமான முறைகேடுகளும் நடந்துவிடக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஒன்றிய பாஜக அரசு, மாநிலங்களின் அனைத்து உரிமைகளையும் பிடுங்கி, ஒன்றியத்தில் குவித்து கொண்டுள்ளதால், அரசு அதிகாரிகள் ஒன்றிய அரசின் அழுத்தங்களுக்கு பணிந்து, பாஜகவின் முறைகேடுகளை அங்கீகரித்து கமுக்கமாக பாதுகாப்பார்கள் என்ற அச்சம் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த அவலம், இந்தியாவில் இன்றைய தவிர்க்கவியலா நிலைப்பாடாக இருந்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு எதிர் நிலைப்பாடு உள்ளவைகளே, தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஐந்து மாநிலங்களும் ஆகும். இந்த மாநிலங்களில் முறைகேடாக பாஜக வெற்றியை விதைத்து விடுமேயானால், பாஜகவுக்கு முறைகேடாக கிடைத்த சட்ட அங்கீகாரத்தை முறியடிப்பதில், எதிர்கட்சிகளால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாமல் போய்விடும். அதனாலேயே, தேர்தல் ஆணைய அதிகாரிகளை பாஜக முறைகேடுகளுக்கு முடுக்கிவிடாமல் இருக்க நமது விழிப்புணர்வைக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். தேர்தல் ஆணைய அதிகாரிகளை- பாஜக முறைகேடுகளுக்கு முடுக்கிவிட ஆயத்தமாகுமேயானால், அதிகாரிகள் திமிரவே முடியாமல் வலுவாகவே பாஜகவின் பிடி இருக்கும் என்பதை இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சியினரும் தெளிவாக அனுபவித்து உணர்ந்து அறிந்திருக்கின்றார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.