காங்கிரசின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர் சொல்லப்பட்டது. அனிதா என்ற பெயர். அனிதா தற்கொலை செய்துகொண்டார். அதற்காகவே எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்துப் கருத்துப் பரப்புதல் செய்த காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீட் பிரச்சினை, பணமதிப்பு நீக்கம், சரக்கு-சேவைவரி, தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அவரது பேச்சை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மொழிபெயர்த்தார்.
பாஜக ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை முன்னெடுக்கிறது. இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பார்வைகள் இருக்கின்றன. இந்தப் பன்முகத்தன்மை ஒருங்கிணைந்ததுதான் இந்தியா என நம்புகிறோம். ஆனால், இந்த அடிப்படையை எதிர்க்கும் சித்தாந்தத்தை பாஜக முன்னிறுத்துகிறது. இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது.
தலைமைஅமைச்சரின் அலுவலகம் தான் தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது தலைமைஅமைச்சர் அலுவலக அதிகாரிகள் அல்ல. தமிழர்கள் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். இந்தியாவை வலுவான நாடாக நிலைநிறுத்த தமிழர்களின் குரல் அத்தியாவசியமானதாக உள்ளது.
அதற்கு நடுவண் அரசிடமே எல்லா அதிகாரமும் குவிந்திருத்தல் கூடாது. அந்த அதிகாரப் பகிர்வைப் பற்றிதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அதனை வலியுறுத்தியே திமுக காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர் சொல்லப்பட்டது. அனிதா என்ற பெயர். அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை தமிழகத்தில் நடைபெறாது. அதற்காகவே எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தீர்வுகளை எட்டமுடியும் என நம்புகிறோம். ஆனால் மோடியும் பாஜகவும் இதில் நம்பிக்கையற்றவர்கள். அதனால்தான் ஒருநாள் இரவு 8 மணிக்கு இந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டார். ரூ.500, 1000 தாள்களை மதிப்பிழப்பு செய்தார். அதனால்தான் திருப்பூர் என்ற ஆடை கேந்திரமும், பட்டுத் தொழிலின் தலைநகரான காஞ்சியும் வேதனைப்படுகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனை அழிக்க வேண்டும் என்று மோடி இதனைச் செய்தார்.
பணமதிப்பு நீக்கம் பற்றி மோடி யாரிடமாவது கேட்டாரா? எந்த சிறுதொழில் முதலாளியையாவது அழைத்துப் பேசினாரா? அவர் ஒருவேளை 12 அகவை குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட பதில் சொல்லியிருக்கும். ரூபாய்தாள் அந்த நாட்டு குடிமக்களின் அதிகாரம் என்று; அதை செல்லாததாக்க எந்த அரசுக்கும் உரிமையில்லை யென்று.
மோடி அம்பானிக்கும் அதானிக்கும் வங்கிக் கடன், சலுகைகள் எனப் பணம் கொடுத்தால், காங்கிரஸ் திமுக ஏழை மக்களுக்குக் கொடுக்கும்.
பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.72,000 வீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பணம் செலுத்தப்படும்.
பெண்கள்தான் இந்தியாவின் பலம். ஆனால் அவர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதனை உறுதிப்படுத்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். அதேபோல், நடுவண் அரசு அலுவலகப் பணிகளில் 33விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மோடி என்ன செய்தார். உண்மையில் எதுவும் செய்யாமல் மோடி உங்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கிறார். வெற்று அறிவிப்பை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அறிவித்தார்.
மோடி பணக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு பணம் வழங்கினார். இளைஞர்களுக்கு என்ன செய்தார். மேக் இன் இந்தியா தாளில் இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்கள் கையில் இருக்கும் செல்போன், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, நீங்கள் போட்டிருக்கும் காலணியைப் பாருங்கள். எல்லாம் மேட் இன் சைனா என்று சொல்லும். நாங்கள், இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பளிப்போம். புதிதாக தொழில் முனைவோர் 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அரசுத் துறையிடமும் அனுமதி பெறும் கெடுபிடி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.