Show all

பல்லாயிரவர் பகிர்ந்து வருகின்றனர்! ‘நரேந்திர மோடி செய்த பேரழிவுகள்’ இன்று காலை வெளியான இராகுலின் இந்தக் கீச்சுப்பதிவை

நரேந்திர மோடி செய்த பேரழிவுகள் என்று இராகுல் காந்தி கீச்சுவில் பட்டியலிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் யாரும் இன்னார் ஆகிய நாங்களும் என்று அங்கீகரித்து கொண்டாடாமல் தனித்து விட்டுள்ளனர்.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இராகுல் காந்தி, “மோதி செய்த பேரழிவுகள்” என்று கீச்சுவில் இன்று காலை பட்டியலிட்டிருந்தார். அந்தப் பதிவு, இன்று மதியம் வரை சுமார் 23 ஆயிரம் முறைக்கு மேல் மறுபகிர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் இன்னார் ஆகிய நாங்களும் என்று அங்கீகரித்து கொண்டாடாமல் தனித்து விட்டுள்ள வழக்கமான வேதனையும் நிகழ்ந்தேயுள்ளது.

பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கழித்தல் 23.9 விழுக்காடு என்ற அளவில் சுருங்கியுள்ளது. இதற்காக, எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசை கடுமையாக பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இராகுல் காந்தியும் இன்று காலை அந்த வகைக்காக ஒரு கீச்சுப் பதிவை பகிர்ந்திருக்கிறார்.

அதில் நரேந்திர மோதி அரசு மீதான விமர்சனங்களையும், அரசுக்கு எதிரான அலுவல்பூர்வ புள்ளி விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
1. வரலாறு காணாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி  (ஜிடிபி) சரிவு.
2. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை.
3. 12 கோடி வேலை இழப்பு.
4. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சரக்குசேவைவரி பங்கை நடுவண் அரசு வழங்காமல் இருப்பது.
5. அன்றாட எண்ணிக்கை அடிப்படையில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் மரணங்களில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் இருப்பது.
6. எல்லையில் வெளிநாட்டினரின் அத்துமீறல். என்று பட்டியல் இட்டுள்ளார். இதற்கு முன்னரும் தொடர்ந்து இராகுல் நடுவண் பாஜக அரசு மீது வைத்து வந்த பழைய பேரழிவுகளையெல்லாம் அவர் பட்டியலில் இணைக்கவில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.