Show all

கொரோனா இல்லை என்று தவறுதலாக குறிக்கப்பட்டு, பின் கண்டுபிடிக்கப்பட்டது! வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, விமானி திருப்பி அழைப்பு

பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெகிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக, டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு எ320 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டு இருக்கும்போதே விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லியிருந்து தகவல் வந்தது. இதையடுத்து, விமானம் டெல்லிக்கு மீண்டும் மதியம் 12.30 மணிக்கு திரும்ப வரழைக்கப்பட்டது.

விமானப் பயணம் தொடங்குவதற்கு முன்பாக விமானிகள் கொரோனா சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சோதிக்கப்பட்டபோது அந்த விமானிக்கு தொற்று இல்லை என்று தவறுதலாக குறிக்கப்பட்டுவிட்டது. பின்பு மறுமுறை பரிசோதனை பட்டியலை சரிபார்த்தபோது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவசரமாக மாஸ்கோ செல்லவிருந்த விமானம் நடுவழியிலிருந்து மீண்டும் டெல்லிக்கு திருப்பியனுப்பப்பட்டது. இன்று கிளம்பிய இந்த ஏர் இந்திய விமானம், புறப்பட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகு விமானிக்கு கொரோனா தொற்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது. பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெஸ்கிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.

டெல்லி - மாஸ்கோ விமான இந்த தவறான முன்னெடுப்பை மறைக்கவோ நியாயப்படுத்தவோ விரும்பவில்லை எனவும், கவனக்குறைவால் நடந்த இந்தத் தவற்றை மீண்டும் செய்ய மாட்டோம் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.