உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யா- சர்ச்சைக்குரிய ஒருவர் என்று ஹெச்.ராஜா வளர்ச்சிக்குத் தடையை முன்னெடுக்கிறாராம். 09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: எங்கே கொஞ்ச நாளாக எச்.இராஜாவைக் காணோம் என்று தேடியவர்களுக்கு கிடைத்த விடை: அண்மையில் அறிவிக்கப்பட்ட பாஜகவின் இந்திய அளவிலான நிர்வாகிகள் பட்டியலில், தடாலடி பிரமுகரான ஹெச்.இராஜா பெயர் இடம்பெறவில்லை. இதனால் அண்மைக் காலமாக வழக்கமாகப் பேசும் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் அவர் பேசுவதில்லை என்பதாகத் தெரியவருகிறது. அவர் ஒன்றிய அமைச்சராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதனால்தான் மௌனமாக இருக்கிறார் என்கிறார்கள் அவரின் தனிப்பட்ட ஆதரவாளர்கள். ஆனால், அவரைப்போய் அமைச்சராக்குவதா என்று தமிழக பாஜகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் டெல்லிக்குச் சென்றிருக்கிறது என்கிறது பாஜக வட்டாரங்கள். பாஜகவின் இந்திய அளவிலான செயலாளர் பதவியை பாஜக தலைமை பறித்துக் கொண்டதால் மனசங்கடத்தில் இருந்த இராஜா, இதுகுறித்து பெரிதாக உணர்ச்சி காட்டவில்லை. அதே நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னையும் தன் முதன்மைத்துவம் கருதி தேர்வு செய்ய வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார். எப்படியாவது ஒன்றிய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். ஆனால், உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யாவோ, சர்ச்சைக்குரிய ஒருவரை எங்கள் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அனுப்பமாட்டோம் என ஹெச்.ராஜாவுக்கு தடையை முன்னெடுக்கிறாராம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



