Show all

கொரோனா காரணம்! வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஒவ்வொரு உடை அடையாளத்தை நம்மை முன்பு ஆண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொடுத்திருந்தனர். அதையே இந்திய விடுதலைக்குப் பின்னும் நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா அதற்கு விலக்கு வாங்கித் தந்திருக்கறது. 

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஒவ்வொரு உடை அடையாளத்தை நம்மை முன்பு ஆண்டிருந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் கொடுத்திருந்தனர் அதையே இந்திய விடுதலைக்குப் பின்னும் நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம். 

வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உச்சஅறங்கூற்றுமன்றம் தற்போது அறிவித்துள்ளது.

அறங்கூற்றுமன்ற வழக்குகளில் அணியமாகும் போது வழக்கறிஞர்கள் கருப்பு கோட்டு, கருப்பு கவுன், வெள்ளை கழுத்து பட்டை ஆகியவற்றை அணிவது என்கிற இந்த பிரித்தானியர் முன்னெடுத்துவந்த முறையை, கொரோனா பரவுதலை தடுக்கும் வகையிலும் மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலும் உச்சஅறங்கூற்றுமன்ற வழக்கு விசாரணைகளில் அணியமாகும் வழக்கறிஞர்கள் இனி சாதாரணமான வெள்ளை சட்டை, வெள்ளை சல்வார் கமீஸ் அல்லது வெள்ளை புடவை மற்றும் வெள்ளை கழுத்துப் பட்டையை தற்போதைய தூய்மைப்பாட்டு சூழ்நிலை உள்ளவரை அல்லது அடுத்த உத்தரவு வரை அணிந்து கொண்டு காணொலி மூலம் விசாரணையில் கலந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்று காணொலி மூலம் நடைபெற்ற விசாரணை ஒன்றில் பங்கேற்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டே, வழக்கறிஞர்கள் வழக்கமாக அணியும் கருப்பு கவுன் மற்றும் கருப்பு கோட்டு ஆகியவற்றால் கொரோனா எளிதாக தொற்றும் ஆபத்து உள்ளதாகவும் தற்போதைக்கு இந்த மரபை சற்று நிறுத்தி வைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்ததாகவும் அதனை தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.