Show all

வந்தே விட்டது இந்தியாவிற்கும்! இதுவரை ஆறு பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் மேலும் நுண்ணுயிரி பரவாமல் தடுக்க நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கொடிய கோரோனா தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் துபாயில் இருந்து தெலங்கானா திரும்பிய ஒருவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் மருத்துவமனைகளில் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எதற்காகவும் அச்சப்பட வேண்டாம் என்று இந்திய நலங்குத்துறை தெரிவித்துள்ளது. 

முன்னதாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மூன்று மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்கள் தொடர்ச்சியாக மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு குணமாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை இதுவரை நடுவண் நலங்குத் துறை ஆய்வுக்கு உட்படுத்தவோ கொண்டாடவோயில்லை. இனியாவது இதில் அக்கறை காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடுவண் நலங்குத்துறை முன்னெடுக்க வேண்டும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.