25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் போது பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப் பட்டவைத் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், விடைத்தாள் நகல் எடுத்துக் கொடுத்தது. தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக ஹிந்தி வினாத்தாள் கொடுத்தது. மாணவிகளை குழாயடிச் சண்டையில் ஈடுபட்டவர்களைப் போல தலைவிரி கோலமாக்கியது மாணவர்களுக்கு, சீன எல்லையிலும், பாகிஸ்தான் எல்லையிலும் தேர்வு மையம் ஒதுக்கி இரண்டு பெற்றோர்களை காவு வாங்கியது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். தேர்வு உறுதியாக இரத்து செய்யப் படலாம் என்று உறுதியாக நம்பப்;படுகிறது. இந்நிலையில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் மீது நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த நீட் பயிற்சி நிறுவன உரிமையாளர் அஸ்வினி, ஆர்த்தி ஆகியோர் மீதும், முறைகேட்டுக்கு தரகராக செயல்பட்டதாக மோகித் குமார், மனோஜ் சிக்கா ஆகியோர் மீது நடுவண் குற்றப்புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவபடிப்புக்கான சீட்டு வாங்கித் தருவதாக விலை பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,781.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.