25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மின் கட்டணத்தை அலுவலகங்களில் நேரடியாக செலுத்துவதற்கான கூண்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மின் நுகர்வோர் முன்பெல்லாம் கட்டணத்தை மின் வாரிய அலுவலகங்களில் மட்டுமே செலுத்தி வந்தனர். இதற்காக, தமிழகம் முழுவதும் 3,500 மையங்களில் 5,000 கூண்டுகள் திறக்கப்பட்டன. மின் கட்டணங்களை மின் வாரிய இணையதளம் வழியாக இயங்கலையில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் பிறகு அஞ்சல் நிலையங்கள், அரசு மின்-சேவை மையங்கள், 18 பொதுத்துறை, தனியார் வங்கிகளின் கிளைகள், செல்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை இயங்கலை, மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்த மின் வாரியம் ஊக்கப்படுத்தி வருகிறது. தற்போது 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை இயங்கலை, வங்கிகள் மூலம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே, கூண்டுகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மையத்தில் 3 அல்லது 4 கூண்டுகள் இருந்தால் தேவைக்கு ஏற்ப அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதேநேரத்தில், ஒரே கூண்டு உள்ள மையங்கள் மூடப்படாது. மூடப்படும் கூண்;டுகளில் பணியில் உள்ள ஊழியர்கள் வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவர். என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவிக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,781.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.