27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது கீச்சுவில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பின்போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில், பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மலேசிய சுற்றுப் பயணத்தின் போதே இதை ராகுல் இலைமறை காயாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரியங்கா நளினியின் சந்திப்பின் போதே குறிப்பாக நளினியையும், முருகனையும் மன்னிக்கத் தலைப் பட்டார் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ராஜிவ் குடும்பத்திற்குத் தெரியும்! ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப் பட்டுள்ள, பேரறிவாளன் உள்ளிட்டோர் அப்பாவிகள் என்று. நடுவண் புலனாய்வுத் துறை, அறங்கூற்று மன்றங்கள் அவர்களை குற்றவாளி என்று நிருபிக்க முயலும் போது எப்படி அவர்களால் மறுக்க முடியும். ராஜிவ் கொலையில் ஆதாயம் பெற்றவர்கள் யார்? இந்த அப்பாவிகள் விடுதலை செய்யப் பட்டால் அந்த ஆதாயம் அடைந்தவர்கள் குட்டு அம்பலமாகும் இல்லையா? அதன் பொருட்டே இந்த அப்பாவிகள் விடுதலையாவது கெடுக்கப் படுகிறது. தமிழிழ விடுதலை கெடுக்கப் பட்டதிலும், விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டதிலும், விடுதலைப் புலிகளோடு சேர்த்து, அப்பாவி பொது மக்களும், பெண்களும்- குழந்தைகளுமாக கொல்லப் பட்டதிலும், திமுகவின் மீது வன்முறை ஏவிவிடப் பட்டு அந்த முறை திமுக ஆட்சிக்கு வராமல் தடுக்கப் பட்டதிலும், ராஜிவ் குடும்பத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவைகளை அரங்கேற்றியதிலும், இதனோடு தொடர்பு படுத்தி அதற்காக இது என்பது போல, ராஜிவ் கொலையிலும், ராஜிவ் காந்திக்கு பின் ஆட்சியில் அமர்ந்த சிலருக்கும், தற்போது நிரந்தரமாக நடுவண் அரசை கைப்பற்ற முயலும்; சிலருக்கும், உலகளாவிய தமிழ் விரோத சக்திகளுக்கும் மட்டுமே ராஜிவ் கொலையில் தொடர்பு இருக்கிறது என்றே திருச்சி வேலுச்சாமி அவர்கள் ராஜிவ் கொலை குறித்த தனது நூல் மூலம் விளக்குகிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.