Show all

பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார்! நமீதா அதிரடிப் பெண்ணாக அசத்துவாராம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார். கடைசியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய காதல்டா என்னும் புதிய படத்தை இயக்க உள்ளார். 

இந்தப் படத்தை தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படம் தனது வழக்கமான பாணியில் ஒரு காதல் கதையாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தில் நமீதா வித்தியாசமான ஒரு அதிரடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் ராதாரவி, தன்பாப், வி.டி.வி.கணேஷ், ஜெகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோபோ சங்கர், சுகுமார், கொட்டாச்சி, தியாகு, கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளை டி.ராஜேந்தரே ஏற்றுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,845.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.