Show all

சொத்துக்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் கெரோனா! பங்குசந்தைவீழ்ச்சி- ரூ.40,000 கோடி சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி கண்டுள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆம்!இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இன்று மதிய நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி தீவிரமடைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய் விலையும் இன்று சர்வதேசச் சந்தையில் 30விழுக்காடு சரிந்தது. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. இன்று மட்டும் நிப்டி மதிப்பு 6.08 விழுக்காடு குறைந்தது. மேலும் நிப்டி பங்கு ஒன்றின் விலை 10,294 வரை சரிந்தது. இதுவே கடந்த 17 மாதங்களில் நிப்டியின் குறைந்தபட்ச மதிப்பாகும். அதேபோல மும்பை பங்குச்சந்தையும் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. ஒரு பங்கின் மதிப்பு 1,095 வரை குறைந்தது. இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன வரலாற்றில் கடந்த 11 ஆண்டுகளில் மிகக்குறைந்த பங்கு மதிப்பு ஆகும். இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இன்று மதிய நிலவரப்படி சுமார் 40,000 கோடி வரை சரிந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 41.8 பில்லியின் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு இன்று பிற்பகல் நிலவரப்படி 12.40விழுக்காடு குறைந்தது. கரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது சிக்கியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.