Show all

வாழ்த்திப் பாராட்டுகிறோம் சோனுசூட்! திரைப்படத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு மிடுக்குப்பேசி வழங்கி அசத்தல்

ஆச்சார்யா படக்குழுவில் பணியாற்றிய திரைப்படத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு, நடிகர் சோனு சூட் இலவசமாக மிடுக்குப்பேசி வழங்கியது இன்றைய பாடுபொருளாகியுள்ளது.

23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு, தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, உழவர்க்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மிடுக்குப்பேசி வாங்கி கொடுத்தது, ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக செல்பேசி கோபுரம் அமைத்துக் கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம். 

அவரது கொடைச் செயல்களை பாராட்டி தெலங்கானாவில் உள்ள துப்ப தண்டா என்கிற கிராமத்தில் சோனு சூட்டுக்கு கோயில் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வரும் சோனு சூட், அந்தப் படப்பிடிப்பில் பணியாற்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய திரைப்படத்துறைத் தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார். அவர்களின் குழந்தைகள் மிடுக்குப்பேசி வசதியின்றித் தவித்தது சோனு சூட்டுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து படக்குழுவில் இருந்த பணியாளர்களுக்கு 100 மிடுக்குப்பேசிகளைத் தன் சொந்த செலவில் வாங்கித் தந்திருக்கிறார் சோனு சூட். அவரின் இந்தச் செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.