24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி எங்களுடைய உடைமை ஒரு சொட்டு நீர் யாருக்கும் தரமாட்டோம் என்று நிற்கிற சித்தராமையாவை என்ன கழுவிலா ஏற்றி விட்டார்கள்? கல்லூரிகள், மருத்துவமனைகள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்திட்டம் எல்லாம் எம்முடைய உடைமை. எங்கள் நிறுவனத்திற்கு எங்கள் மாணவர்களால், தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதற்கு குறுக்கே நடுவண் அரசின் இடைநிலைக்; கல்வி வாரியம் என்ன தாதா? ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன் என்றுதானே ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் நாம் விடுதலை பெற்றோம். விடுதலை பெற்ற இந்தியாவில் இந்தக் கல்வி முறை உயர்ந்தது, இந்தக் கல்வி முறை தாழ்ந்தது என்கிற பாகுபாடு ஏன்? அதிலும் ஒரு கல்வி முறைக்கு ஏன் இத்தனை அதிகாரம்? தமிழகத்தின் கல்விமுறை பாரம்பரியமான அகநிலைக் (சப்ஜெக்ட்வ்) கல்விமுறை. நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் பின்பற்றுவது நவீன புறநிலைக் (ஆப்ஜெக்டிவ்) கல்விமுறை. அகநிலைக் கல்விமுறை இல்லா விட்டால் இன்னைக்கு இத்தனை அறிவியல் முன்னேற்றமும் சாத்தியமில்லை. அகநிலைக் கல்விமுறை என்பது பக்கம் பக்கமாக பாடங்களை மனதில் பதித்துக் கொள்வது. நமக்கு கிடைத்திருக்கிற தொன்மங்கள் அனைத்தும் இன்றைக்கும் சேமித்து வைக்கப்பட்டது அகநிலைக் கல்விமுறையால் பழங்கால கல்வியாளர்களின் மனங்களில்தான். இன்றைக்கு எல்லாவற்றையும் கணினி வன்தட்டில் சேமிக்கிறோம் என்பதற்காக அன்;றைய பழைய அகநிலைக் கல்வி முறையை இழித்து பேச முடியாது. புறநிலைக் கல்வி முறை என்பது பக்கம் பக்கமாக நினைவில் வைத்துக் கொள்ளாமல் புள்ளிகளை மட்டும் குறித்து வைத்துக் கொள்வதாகும். புறநிலைக் கல்விமுறையை வைத்து கணினியின் மென்பொருளை உருவாக்க முடியாது. ஓவியம், சிற்பம், வாகனங்களை யோட்டுதல் என்பதெல்லாம் அகநிலைக் கல்வி முறையைச் சார்ந்தது. அனைத்து உடலுழைப்பு செயல்பாடுகளும் அகநிலைக் கல்விமுறை சார்ந்தது. புறநிலைக் கல்வி முறைக்காக உருவாக்கப் பட்ட நூல்கள் கணினி வன்தட்டுக்கள் எல்லாம் அகநிலைகல்வி முறைப் பதிவுகள் தான். புறநிலைக் கல்வி முறையென்பது, ஆங்கிலேயர் தமக்குத் தேவையான எழுத்தர்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்தார்களே மெக்காலே பாடத்திட்டம், அது போல கார்ப்பரேட்டுகளுக்கும் ஆளுமைத் துறைக்குமான நிருவாகக் கூலிகளை உருவாக்குவதற்கான எளிதான கல்விமுறையே புறநிலைக் கல்விமுறை. இந்தக் கல்விமுறையும், அகநிலைகல்வி முறைப் பதிவுகளான பாடநூல்கள் கணினி வன்தட்டுக்கள் மென்பொருள் எல்லாம் இயங்க முடியாது. இந்தியாவில் ஆங்கில மோகம் போல புறநிலைக் கல்விமுறை மோகமும் தலைவிரிதாடுகிறது. அதை கல்விமுறையாக கொண்டுள்ளதாலேயே நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியமும் இந்த ஆட்டம் போடுகிறது. இங்கே நாம் நிறுவுவது எடப்பாடி-பன்னீர் அரசு துணிச்சலாக நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை என்று மறுத்திருந்தால் அவர்கள் ஒன்றும் கழுவில் ஏற்றப்பட்டிருக்க மாட்டார்கள். நடுவண் அரசு ஆட்சியை பிடுங்கினாலும் தமிழ்மக்கள் ஆட்சியை வழங்குவார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.