24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார், சசிகலா இணையர் மகள் வில்லட் ஓவியா. திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப்பள்ளியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கியுள்ளார். முதுகெழும்பு இல்லா பன்னீர்- எடப்பாடி அரசில், நமக்குச் சொந்தமான மருத்துவ கல்வியில் நடுவண் அரசின் தாதாதனத்தால் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட நீட் தேர்வின் கொடுமையால் தன் உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, தான் உருவாக்கியுள்ள செயற்கைக்கோளுக்கு 'அனிதா சாட்' என்ற பெயரை மாணவி வில்லட் ஓவியா சூட்டியுள்ளார். 'அனிதா சாட்' செயற்கை கோள் இந்திய நேரப்படி இன்று காலை 7.05 மணிக்கு மெக்சிகோவில் இருந்து வளிமண்டலத்தில் ஏவப்பட்டது. வாழ்த்துக்கள் ஓவியா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.