கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதாக தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. மாறாக இந்திய மக்கள் கெரோனாவிற்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டும் என்று வழக்கமான பாஜக பாணியில் பொதுமக்களை நிர்பந்தித்து பேசினார். 06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது மோடி கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நடுவண் நலங்குத்துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் நலமாக இருந்தால், உலகம் நலமாக இருக்கும். இதுவே நம் தாரக மந்திரம். உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா. உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. திடீரென இந்த நுண்ணுயிரி சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது. கொரோனா நுண்ணுயிரி பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கெரோனா பரவலை தடுத்துள்ளது. மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது. 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து, முன்கூட்டியே அறியும் வசதியோ இதுவரை இல்லை. எதிர்வரும் ஞாயிறு அன்று காலை 7 மனி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அடுத்த சில கிழமைகள் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். ஞாயிற்றுக் கிழமை கொரோனா தொற்றுக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும். கட்டாயத்தேவை சேவைகளில் பனிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்று கிழமை வெளியே வர வேண்டாம். மக்கள் கூடுவதை தவிர்த்து முடிந்தளவுக்கு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவது மிக முதன்மையாகும். ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் பத்து சக குடிமக்களிடம் மக்கள் ஊரடங்கு என்றால் என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று கட்டாயத்தேவை பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். கொரோனா தொற்று நம்மை ஒன்றும் செய்யாது என நினைக்காதீர்கள். யாரும் முழு தொற்றுக்கு ஆளாகாதீர்கள், நோய் தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள். மக்கள் தங்களை தாங்களாகவே ஊரடங்கு செய்து கொள்ள வேண்டும். மக்கள் விழிப்புணர்வோடு கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது. மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது. கட்டாயத் தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வேலையில்லாத நாள்களில் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளத்தை பிடிக்க வேண்டாம். கைதட்டல், மணியோசை எழுப்பியோ உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள். கொரோனா தொற்று காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. பொருளாதார மந்தநிலையைப் போக்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைத்தட்டல் மூலம் நன்றி சொல்லுங்கள். முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது. அச்சத்தில் கட்டாயத்தேவை பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடவும் அவரது குடும்பத்திற்கும் உதவி செய்யவும். தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



