Show all

நம்பிக்கையில் நரேந்திர சிங் தோமர்! வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்

வேளாண் சங்கங்களுக்கு, கலந்துரையாடல் என்ற தலைப்பில் இதுவரை நடந்த ஐந்து கட்ட ‘வேளாண் சட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட வகுப்பும்’ தோல்வியில் முடிந்தன. நாளை ஆறாம் கட்ட வகுப்பு

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை எதிர்த்து கடுங்குளிரிலும் புதுடெல்லியில் முப்பத்தி நான்காவது நாளாகப் சில உயிரிழப்புச் சோகத்தோடு போராடி வருகின்றனர் வட இந்திய உழவர் பெருமக்கள். 

புதுடெல்லியில் முப்பத்தி நான்காவது நாளாகப் சில உயிரிழப்புச் சோகத்தோடு போராடிவரும் உழவர்களுக்கு, புதிய வேளாண் சட்டங்கள் குறித்த ஆறாம் கட்ட வகுப்பை ஒன்றிய பாஜக அரசு நாளை நடத்தவுள்ள நிலையில்- முப்பத்தி நான்காவது நாளாகப் சில உயிரிழப்புச் சோகத்தோடு போராடிவரும் உழவர்களிடம் இருந்து ‘புதிய வேளாண் சட்டங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்’ என ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லைப் பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் முப்பத்தி நான்காவது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உழவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. வேளாண் சங்கங்களுக்கு, கலந்துரையாடல் என்ற தலைப்பில் இதுவரை நடந்த ஐந்து கட்ட வேளாண் சட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட வகுப்பும் தோல்வியில் முடிந்தன.

ஆறாம் கட்ட வகுப்பு நாளை நடக்க உள்ளது. டில்லியில் உள்ள வேளாண்மாளிகை மையத்தில் நடக்கவுள்ள இந்த கலந்துரையாடல் தலைப்பிலான வகுப்பில் பங்கேற்க 40 வேளாண் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்கள் குறித்து உழவர்கள் நடுவே தவறான எண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு  விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த சட்டங்களுக்கு எதிராக உழவர்களின் இதயங்களில் பொய்களால் கட்டமைக்கப்பட்ட சுவர் விரைவில் தகர்த்தெறியப்படும். உண்மையை அனைவரும் உணரவேண்டிய நேரம் விரைவில் வரும்.

இந்த புதிய சட்டங்களின் பலன்கள் உழவர்களிடம் சென்றடையத் தொடங்கி உள்ளன. பல உழவர்கள் இந்த சட்டங்கள் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில உழவர்களுக்கு மட்டுமே இந்த சட்டங்களில் குழப்பம் நீடிக்கிறது. அவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்து புரியவைப்போம். இந்த புதிய வேளாண் சட்டங்கள் ஏழை சிறு மற்றும் குறு உழவர்களுக்கு பலனிக்கும் என முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.