இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் இன்;று திமுக முன்னெடுக்கும் பேரணி தொடங்கியது. காவல்துறை மறுத்த நிலையில், திமுக பேரணிக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அனுமதி அளித்துள்ளது. 08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணி சற்றுமுன் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், கனிமொழி, தயாநிதி மாறன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்காணோர் அணிதிரண்டு பேரணியை சிறப்பித்துக் கொண்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய பாஜக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து இராசரத்தினம் விளையாட்டுத் திடல் வரை பேரணி நடைபெறுகிறது. பேரணியின் காரணமாக 2 கூடுதல் ஆணையர், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு வண்டிகள் மூலம் பேரணி கண்காணிக்கப்படும் என காவல்துறை தகவல் அளித்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க 6 கலவர தடுப்பு வாகனங்கள், 3 தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,373.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.