தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக ரூபாய் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு, வானியலர் நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்டது 28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் வானியலர் நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. இருபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி திட்டம் தொடர்பான கமுக்க ஆவணங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக 2 வானியலர்கள் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் இந்திய விண்வெளி ஆய்வு மைய வானியலராக இருந்த நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த முன்னெடுப்பு நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. வானியலர் நம்பி நாராயணன் மீது தவறு இல்லை எனக் கண்டறிந்து நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை அவரை விடுவித்தது. தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக இழப்பீடு கோரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது. இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சர்பு அறங்கூற்று மன்றத்தில் நம்பி நாராயணன் மனு பதிகை செய்தார். இதற்கிடையே, அவருக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், வானியலர் நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கேரள அரசு வழங்கியது. குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படுகிற, சட்டத்தால் பாதிக்கப்பட்ட, ஒவ்வொரு நபருக்கும் இம்மாதிரியான நியாயம் வழங்கப்படுமேயானால், அதுவே அறங்கூற்றின் உண்மையான நடுவாண்மையாக இருக்க முடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.