‘வங்கிகள் இணைப்பு’ இந்திய அரசின் அதிரடிக்கு! உடனடி எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகளும், 12 பொதுத் துறை வங்கிளாக இணைக்கப் படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். (!) பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இவ்வாறு இணைக்கப்படுவதால், வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், இணைப்புகள் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இதனால் நன்மை கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார். இந்நிலையில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எங்களுக்கு பெரும் வங்கிகள் மற்றும் பெரும் இணைப்புகள் தேவையில்லை. மிகப்பரந்த நாட்டில் லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை கூட இல்லை. வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். வங்கிகள் இணைப்பு அறிப்பை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,260.
(!) இதேபோல, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது.
(!) இதேபோல, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும்.
(!) இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணையும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.