உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஒரு தொடர்வண்டி தடம் புரண்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே ஹைஃபியத் விரைவு வண்டி விபத்துக்குள்ளானது. அதிகாலை 2.40 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், 100 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிக்கு டெல்லியிருந்து ஒரு மருத்துவ தொடர்வண்டி சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர் நகர் அருகே உத்கல் விரைவுவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், 23 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மீண்டும் ஒரு தெடர்வண்டி விபத்து அதே மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. தொடர்வண்டி துறையில் இருப்பு பாதை பராமரிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களும் அதிகாரிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மாட்டுக்கார வேலன் என்ன செய்து கொண்டிருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



