10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது. அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 அறங்கூற்றுவர்கள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க நடுவண் அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 அறங்கூற்றுவர்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர். பின்னர் 5 அறங்கூற்றுவர்கள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று நடுவண் அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்சஅறங்கூற்றுமன்றம் இடைக்கால தடை விதித்தது. கிழமைக்கு 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த அறங்கூற்றுவர்கள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினர். ஊச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, அறங்கூற்றுவர் கன்வில்கர் ஆகியோர் அறங்கூற்றுவர் ஏ.கே.சிக்ரி கருத்தில் உடன்பாடு ஆதார் அடையாள அட்டை செல்லும் என அரசியல் சாசன அமர்வில் 5ல் 3 அறங்கூற்றுவர்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர் 3 அறங்கூற்றுவர்களில் அறங்கூற்றுவர் ஏகே சிக்ரி தீர்ப்பு அளித்தார். அதில் ஆதார் எதற்கு கட்டாயம்? எதற்கு தேவை இல்லை? என கூறபட்டு உள்ளது நீட் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. ஆதார் இல்லை எனக்கூறி குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடாது. கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது வங்கிக்கணக்குகளை தொடங்க, மொபைல் எண் பெற ஆதார் கட்டாயமில்லை. ஆதார் இல்லை என்பதற்காக தனி நபரின் உரிமைகள் மறுக்கபடக்கூடாது. பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அரசு சலுகைகள் பெற ஆதார் கட்டாயம்;. அரசு சேவையை பெற ஆதார் கட்டாயம் தொலைத் தொடர்பு சேவைக்கு ஆதார் கார்டை இணைக்க வேண்டியது இல்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,922.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



