Show all

பாஜக அவல ஆட்சிக்கு மேலும் ஒரு சான்று! உ.பி,யில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 150 பள்ளிகள்

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியபோது, 

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்கி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தான், உலகளவில் சமூக முன்னேற்ற விசயத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம். என்று அமிதாப் கந்த் கூறியிருந்தார். 

அவர் குறிப்பிட்ட, குழந்தைகள் கொத்து கொத்தாக மடிந்த முதல்வர் ஆதித்தியாநாத் ஆளும், உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பல மாவட்டங்களில் உள்ள 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்கிற தகவலும், உத்திரபிரதேச மாநிலத்தின் பாஜக ஆட்சி அசிங்கத்திற்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது.

அலகாபாத் மாவட்டத்தில் 6 பள்ளிகள், அஜம்கார்க்கில் 6 பள்ளிகள், பைராச், மிர்சாப்பூர், மாவு மற்றும் ஹார்தாய் மாவட்டங்களில் தலா 5 பள்ளிகள், அவுரியா, கவுசாம்பி, கன்னூஜ், மதுரா, லக்மிபுர் கெரி, மெயின்புரி, அலிகார்க், அம்பேத்கர் நகர், ஹத்ராஸ், பஸ்தி, கோரக்பூர், ஜூவான்பூர், அம்ரோஹா, தியோரியா, லக்னோ மற்றும் ஆக்ராவில் தலா ஒரு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில கல்வி வாரிய செயலர் நீனா ஸ்ரீவத்சவா கூறுகையில், இந்த ஆண்டு மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பதை தவிர்க்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும். அவர்களின் அறிக்கைக்கு பின் வாரியம் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,774.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.