Show all

காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை: என்ன ஏமாற்று வேலை செய்ய போகிறார்களோ!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது. இதுவரை மத்திய அரசு வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. 

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று காலை 11 மணிக்குள்  விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்து, எதிர்ப்பின் காரணமாக திரும்ப பெற்றது. 

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி, நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் திட்டத்தை வகுக்கும்படி உச்ச நீதி மன்றம் அறிவித்தது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஸ்கீம் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியவில்லை என்று கதைவிட்டது. இறுதியாக நடந்த விசாரணையின்போது, 2 வார‌ங்களுக்குள் நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு இன்று என்ன கதை விட காத்திருக்கிறதோ என்று தெரியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.