நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுநல மனு பதிகை செய்த நபர் ஒருவருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம். கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த மனுவில் கொரோனா தொற்று இருப்பதால் மதுக்கடைகளில் சமூக விலகலை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள் இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல. இது தொடர்பாக அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது பொதுநல வழக்கு அல்ல. இந்த மனுவை பதிகை செய்த நபருக்கு ரூபாய் ஓர் இலட்சம் அபராதம் விதிப்பதுடன், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



