Show all

18ஆண்டுகளுக்கு முன்னம் நடுவண் அரசுக்கு வீரப்பன் விடுத்த 10 கோரிக்கைகளும், அரசு பதில்களும்

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பல கிராமங்களில் குல தெய்வமாக காணப்பட்ட, இன்றளவும் காணப்படுகிறவர் வீரப்பன். காவிரி விவகாரம், பழங்குடி மக்கள், கூலி ஆட்களுக்காக தமிழக, கர்நாடக மற்றும் நடுவண் அரசிடம் பல கோரிக்கைகள் வைத்துள்ளார் வீரப்பன். வீரப்பனின் கோரிக்கைகளுக்கு அரசும், அறங்கூற்றுமன்றமும் பதில்கள் அளித்துள்ளன. 

ஒருவேளை வீரப்பன் இருந்திருந்தால் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்குமோ என்னவோ என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்கள் பகிர்வதை காண முடிகிறது. மக்களுக்காக வீரப்பன் விடுத்த இந்த கோரிக்கைகளை காணும் போது, ஒருவேளை மக்கள் எண்ணுவதை போன்றே உண்மையிலும் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. 

வீரப்பனின் கோரிக்கைகள்: 

1. தற்காலிகமாக அல்லாமல் வருங்காலத்திலும் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் நிரந்த தீர்வாக தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீரை தர காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவை அமல்ப்படுத்த வேண்டும். 

அரசு பதில்: காவிரி நீர் தீர்ப்பாயாத்தின் இறுதி முடிவு கூடிய சீக்கிரம் வெளியிடப்படும். மேலும், தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீர் பகிர்ந்தளிப்பது குறித்த காவிரி நீர் தீர்ப்பாயத்தின் தலைவரே இடைக்கால உத்தரவை அமல்படுத்துவார். 2. காவிரி நீர் பிரச்சனை மற்றும் கலவரத்தால் 1991ல் தாக்கதிற்குள்ளன, பாதிப்படைந்த தமிழக மக்களுக்கு சரியான இழப்பீடு அளிக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரம் மற்றும் சொத்திற்கு கர்நாடக அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

அரசு பதில்: கர்நாடக அரசு காவிரி கலவர நிவாரண ஆணையத்தை கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் அமைத்துள்ளது. அதன்படி காவிரி நீர் பங்கீடு கலவரத்தில் பாதிக்கப்பட்ட பத்தாயிரம் கோரிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்து சென்ற இரண்டாயிரம் பேருக்கான உதவிகள் என அனைத்து கோப்புகளும் கர்நாடக அரசு அமைத்துள்ள ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான காலக்கெடுவினை 2001ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்க உச்ச அறங்கூற்றுமன்றத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

3. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் இரண்டாவது பெரும் மக்கள் சமூகமாக வாழ்ந்து வருவதால், தமிழ் மொழியை கூடுதல் நிர்வாக மொழியாக அறிவிக்க வேண்டும். 

அரசு பதில்: 1999ம் ஆண்டு மே மாதம் கர்நாடக அரசு, 15விழுக்காட்டுக்கும் மேலாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அரசு அறிவிப்புகள் அவர்களது மொழியிலேயே வெளியிடப்படும் என்ற நடுவண் அரசின் உத்தரவின் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

4. கர்நாடகாவின் பெங்களுரு நகரில், அரசு உடனடியாக திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்க வேண்டும். அரசு பதில்: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை மற்றும் சென்னையில் சர்வஜனாவின் சிலை அந்தந்த அரசு திறந்து வைக்கும். 5. கிராம பழங்குடி மக்களை துன்புறுத்திய அதிரடி படை மீதான சதாசிவம் கமிஷன் விசாரணைக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் மூலம் கர்நாடக அரசு வாங்கிய இடைக்கால தடையை நீக்க வேண்டும். மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு பத்து இலட்சம் ரூபாயும், பிற வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும். குல்டி காவல் அதிகாரிகள் அவர்கள் செய்த தவறுக்கு தக்க தண்டனை பெறவேண்டும். 

அரசு பதில்: விசாரணை கமிஷன் மீதான தடை உத்தரவை அகற்ற கர்நாடக அரசு வேண்டிய முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதிரடி படை காவலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அது சார்ந்து மனித உரிமை ஆணையத்தில் வழக்குகள் பதிவாகின. அவற்றுக்கு 1999ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்கனவே உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்சதாசிவம் மற்றும் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை இயக்குனர் நரசிம்ஹா மூன்று செஷன் முடித்துள்ளனர். இதை அடுத்து, கர்நாடக அரசு மனித உரிமை ஆணையத்தின் இறுதி பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கும். 6. கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றமற்ற நிரபராதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். 

அரசு பதில்: தடா குற்றவாளிகள் தவிர்த்து சிறையில் இருக்கும் குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். 

7. கர்நாடக மாநிலத்தில் கொலை செய்யப்ட்ட ஒன்பது பிற்படுத்தப் பட்ட, மலைவாழ் நபர்களுக்கு போதுமான நிவாரண இழப்பீடு அளிக்க வேண்டும். அரசு பதில்: கொலை செய்யப்பட்ட அந்த ஒன்பது நபர்களின் குடும்பங்களுக்கு போதுமான அளவு இழப்பீடு வழங்கப்படும். 8. நீலகிரி உழவர்களுக்கு பச்சை இலை கொள்முதல் விலையை 15 ரூபாயாக அதிகரித்து அவர்களுக்கு உதவ வேண்டும். 

அரசு பதில்: நடுவண் மற்றும் தமிழக அரசுகள், தேயிலை கொள்முதல் விலையை 4.50 ரூபாயில் இருந்து 9.50 ரூபாயாக உயர்த்தி, வழங்கி வருகிறது. 9. தமிழக சிறையில் இருக்கும் ஐவர் விடுதலை செய்யப்பட வேண்டும். 

அரசு பதில்: இந்தக் கோரிக்கை உகந்ததாக இருக்கும்பட்சத்தில், ஏற்றுக் கொள்ளப்படும். 

10. தமிழகத்தின் மாஞ்சோலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் கூலி ஆட்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் காபி, தேயிலை தொழிலாளிகளின் நாள் ஒன்றுக்கான கூலி 150 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். அரசு பதில்: தற்போது அவர்களது கூலி 74.62 ஆக இருக்கிறது, இதனுடன் மருத்துவம் மற்றும் குடியிருப்பு, நலன் போன்றவற்றை சேர்த்து பார்த்தால். இது மொத்தம் 139 ரூபாயாக இருக்கிறது. இது மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவை ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது. மேற்பட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை மூலம் கலந்தாலோசிக்கப்படும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,780.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.