பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான காயத்ரி ரகுராம், தீவிர பாஜக ஆதரவாளராகவும், மோடியின் ஆதரவாளராகவும் இருந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து மட்டுமின்றி அரசியலில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவில் இருந்து விலகுவது ஏன் என்று நீண்ட விளக்கமளித்து இணையத்தில் தீயாக்கியிருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்: 'வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக இன்று அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. தொண்டர்களை வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. அதனால் கட்சியில் உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. யாரையும் ஆதர்சமாகப் பார்க்க முடியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. திரைப்படத்தைவிட, அரசியலில் நடிகர்கள் அதிகம் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.
அரசியல்வாதி என்பது பகைவன் கதாபாத்திரமே. பேராசை, தந்திர புத்தி என எல்லாம் எதிர்மறை விசயங்களே. நான் இப்போதைக்கு வெளியிலிருந்து அனைத்தையும் பார்த்து, ஆராய்ந்து, இன்னும் கற்றுக்கொள்ள கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இதுவல்ல என்பதை உணர்கிறேன். இது எனது தனிப்பட்ட முடிவு. அனைவருக்கும் நன்றி' என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.