தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் குணமடைந்து வருவதாக கீச்சுப் பதிவிட்டு தன் கொண்டாடிகளை ஆறுதல் படுத்தியுள்ளார். 30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மேல்;தட்டில் தொடங்கிய கொரோனா நோய், எளிய மக்களைத் தாக்குவதுதான் வியப்பு என்ற நிலையில்- கொரோனா தொற்றில் பேரறிமுக நடிகர், நடிகைகள் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிக்கி கல்ராணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் சென்னை எழும்பூரில் வசிக்கிறார். தமிழில் டார்லிங், யாகாவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2, கீ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து கீச்சுப்பதிவில் நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது:- எனவே நாம் பாதுகாப்பாக இருப்பதும், மற்றவர்கள் பாதுகாப்பை கவனிப்பதும் கட்டாயம். எல்லோரும் முகமூடி அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். அவசர தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.” இவ்வாறு கூறியுள்ளார். தமிழ்த் திரையுலகில் அடுத்த காதல் இணையாக நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருப்பார்கள் என அண்மைக் காலமாக பேச்சு ஓடிக் கொண்ருக்கிறது. நடிகர் ஆதி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி கமுக்கமாகக் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நிக்கி கல்ராணிக்கு கொரோனா வரக் காரணம் நடிகர் ஆதி வீட்டுக்கு சென்றது தான் என செய்திகளை பரப்பி விட்டுள்ளனர். இதனால் அவரது வீட்டுக்கும் சோதனை செய்ய ஆட்கள் அனுப்பப் பட்டுள்ளார்களாம்.
எனக்கு கடந்த கிழமை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. காய்ச்சல், சுவை இல்லாத தன்மை, நுகரும் திறன் குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று இப்போது தேறி வருகிறேன். எனக்கு வேறு உடல்நலக் கோளாறுகள் இல்லை என்பதால் எளிதாக பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன். இந்த காலகட்டம் அனைவரையும் பயமுறுத்தக்கூடியது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.