கொரோனா பரவலை முன்னிட்டு எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட அறிவித்து, பிள்ளையார் சிலை அமைத்தல், ஊர்வலம் போதல், நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து ஆணையிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் ஒரு ஹிந்து அமைப்பு தமிழகம் முழுவதும் 1,50,000 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப் போவதாக அறைகூவல் விடுத்துள்ளது. 30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலை முன்னிட்டு எதிர்வரும் பிள்ளையார் சதுர்த்தியை அமைதியாக கொண்டாட அறிவித்து, அண்மைக் காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும்- பொது வெளியில் பிள்ளையார் சிலை அமைத்தல், ஊர்வலம் போதல், நீர்நிலைகளில் கரைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து ஆணையிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசு விதித்த தடையை மீறி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று ஒரு ஹிந்துத்துவா அமைப்பின் சார்பாக சி சுப்பிரமணியம் என்கிற நபர் அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை தங்கள் அமைப்பு கடுமையாக கண்டிப்பதாகவும், கடந்த பல ஆண்டுகளாக ஹிந்துத்துவா எழுச்சிக்காக இந்த விழாவைக் கொண்டாடி வருவதாகவும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி விநாயகர் சிலை நிறுவி விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பெறும் என்றும் சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.