Show all

குந்தவையாக நடிக்க வேறு நடிகையைத் தேர்வு செய்யவேண்டிய தேவை எழுமா? பொன்னியின் செல்வன்- கீர்த்திசுரேஷ்

மணிரத்தினம் இயக்க, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் ரூ800 கோடி செலவில்- தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. பொன்னியின்  செல்வன்  படப்பிடிப்பு  தொடங்கியது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மணிரத்தினம் இயக்க, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. இதில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர்.

குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் மற்றும் பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.

ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்துள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது. கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை மணிரத்னம் படமாக்கினார். மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்பட உள்ளன. இதற்காக அனைவரும் பாங்காக் புறப்பட்டு செல்கிறார்கள். 40 நாட்கள் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு திரைப்பட ஆர்வலர்கள் நடுவே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பெண்குயின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் 2 படங்கள் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்திப் படம் என வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவர் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகி ரஜினி - சிவா படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் உண்மை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,364.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.