Show all

குவியும் வாழ்த்துக்கள்! அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  அடங்க மறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தனது கீச்சுப் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்.

ஜெயம் ரவி தற்போது 'கோமாளி' படத்தில் நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதொடர்பாக தனது கீச்சுவில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவி, ஸ்கீரின்சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்கிறேன். புதிய படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குறிப்பிட்ட நிறுவனம் முன்னதாக, தடம், சண்டக்கோழி 2, நீயா மற்றும் இருட்டு போன்ற படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியின் இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.