இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள்- நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தற்போது புது திருப்பமாக ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவ்வளவு தாமதமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதால், மேலும் ஏதாவது சதித் திட்டம் இருக்குமோ என்று அஞ்சப் படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.