தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்காக பனை மரத்தில் நெறியேறிய கதையாக இருக்கிறது- இலங்கை குண்டு வெடிப்பு கொடூரர்கள் சொல்லும் காரணம். நியுசிலாந்து தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு இது பதிலடியாம். இரண்டிலும் பாதிக்கப் பட்டது அப்பாவி பொதுமக்கள் தானே கொடூரர்களே! 10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடத்தப் பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிலையில், உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று கூடி, இந்த சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தியது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,131.
இதில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர், ருவான் விஜேவர்த்தன பேசுகையில், கிரைஸ்ட் சர்ச் நகரில் மசூதிகளை குறிவைத்து வலதுசாரி அமைப்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இலங்கையில், தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நோக்கம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னணியில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக, இந்திய உளவுத்துறையும் ஏற்கனவே தெரிவித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், கூறுகையில், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த, கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதிகள், அங்கு தொழுகை நடத்த வந்த முஸ்லீம்களை நோக்கி, சரமாரியாக சுட்டனர். இந்தப் பயங்கர சம்பவத்தில் 50 பேர் பலியாகினர். இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது. கிறிஸ்தவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள்தான், இந்தத் தாக்குதலை நடத்தியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக கிறிஸ்தவர்கள் மீது, இலங்கையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, அறியப் படுவதாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.