Show all

மூன்றாவது இடம் பிடித்த இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி! உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில்

உலகம் கொண்டாடும் மூன்றாவது பணக்காரர் அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, பைஞ்சுதை, மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் தகவலை, ப்ளூம்பெர்க் பில்லியனர் நிறுவனம் பட்டியல் இட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் 251 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெஜோஸ் 153 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 137 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவர், பிரான்சை சேர்ந்த லூயி உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

இந்தியாவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் முகேஷ் அம்பானி, சீனாவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் ஜாக் மா உள்ளிட்ட ஆசிய பணக்காரர்கள் கூட இதுவரை மூன்றாவது இடத்தை பிடித்தது கிடையாது.

அதானி குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனராக கவுதம் அதானி உள்ளார். இந்தியாவில் உள்ள முதன்மையான துறைமுகங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. நிலக்கரி வணிகத்திலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

கடந்த ஆண்டு இறுதியில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 5.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, பைஞ்சுதை, மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,357.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.